Home

Athiyur Welcome's You


Athiyur(அத்தியூர்):
  
Athiyur is a Village in Kumbakonam Taluk in Thanjavur District of Tamil Nadu State, India. It is located 44 KM towards North from District head quarters Thanjavur. 11 KM from Kumbakonam. 284 KM from State capital Chennai.This Place is in the border of the Thanjavur District and Thiruvarur District. Thiruvarur District Valangaiman is South towards this place . Also it is in the Border of other district Ariyalur.Athiyur Pin code is 612503 and postal head office is Sholapuram .
Uthamathani ( 1 KM ) , Devanancheri ( 2 KM ) , Kallur ( 3 KM ) , Neerathanallur ( 3 KM ) , Thirunallur ( 3 KM ) are the nearby Villages to Athiyur. Athiyur is surrounded by Thiruppanandal Taluk towards East , Tiruvidaimarudur Taluk towards East , Kumbakonam Taluk towards South , Valangaiman Taluk towards South.Kumbakonam, Thanjavur , Thiruvarur , Sirkali , Nanjikottai are the nearby Cities to Athiyur.Tamil is the Local Language here. The Amman, Munishwaran, Ayyanar, Vinayagar, Sivan Temples are very famous.   


Population:
    As per the 2011 census, Athiyur had a total population of 2630.The sex ratio was 97.7. The literacy rate was 72.99.Compare with 2001 census,Literacy rate and population are increased. Athiyur is a village panchayat consist of three villages namely Athiyur, Aanoor and Kurugoor. It comes under Kumbakonam legislative assembly constituency and Mayiladuthurai parliamentary constituency.

Sub Villages:
Anoor,Kurugoor,Anna Nagar.
        
General Information:

Athiyur:
Country
Tahsil
Kumbakonam
Population (2011)
2630
Languages
Official
612503
Telephone Code / Std Code
0435
TN68
Elevation / Altitude
29 meters. Above Seal level
Post Office
Athiyur

மருத்துவ குறிப்புகள்
முகம் பளபளப்பாக...
வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.


தலைவலி குறைய...
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.(அல்லது) வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.


கண்வலி குறைய...
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.(அல்லது) கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நரட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.


சளி குறைய...
பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.(அல்லது) வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளிக் குறையும்.(அல்லது) தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.


மூச்சு வாங்குவது குறைய...
தும்பை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டியளவு காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வாந்தால் மூச்சு வாங்குவது குறையும்.


காதுவலி குறைய...
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குறையும். கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.(அல்லது) கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.


ஒற்றை தலைவலி குறைய...
ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.(அல்லது) முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.


ஒற்றை தலைவலி குறைய...
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும். (அல்லது) திப்பிலி, கஸ்தூ‌ரி மஞ்சள், சந்தனம் மற்றும் படிகாரம் ஆகியவற்றை பசும்பால், இளநீர் விட்டு தனித்தனியாக முறைப்படி ஊற வைத்து அரைத்து ஒன்றாக கலந்து உருண்டையாக்கி காய வைத்து இடித்து சலித்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, மூக்கெரிச்சல் குறையும்.


பல் வலி குறைய...
ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.(அல்லது) பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.


தொண்டைப்புண் குறைய‌...
மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.


இருமல் குறைய...
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.(அல்லது) மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


ஒற்றை தலைவலி குறைய...
சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.


கண்பார்வை அதிகரிக்க...
கேரட், துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சோ்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.(அல்லது) சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.


இடுப்பு வலி குறைய‌...
உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.(அல்லது) இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடு செய்து ஆறிய பின் நன்றாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை குறையும்.


க‌ழுத்து வ‌லி குறைய...
நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.(அல்லது) குப்பைமேனி சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர க‌ழுத்து வ‌லி குறையும்.


முதுகு வலி குறைய...
வெட்டிவேரின் புல்லை எடுத்து கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.(அல்லது) மிளகு, கிராம்பு மற்றும் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.(அல்லது) பூண்டை நல்லெண்ணெய் சேர்த்து,கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் தேய்க்க‌ முதுகு வலி குறையும்.


தலைமுடி வளர...
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.(அல்லது) வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.


வாய்ப்புண்கள் குணமாக...
மணித்தக்காளி இலைகளை நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், உட்காய்ச்சல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


உடல் சூட்டைக் குறைக்க.....
எள் எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வரக் கண்கள் குளிர்ச்சியடையும்; தலைப்பாரம், உடற்சூடு ஆகியன குறையும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


உடற்பலம் உண்டாக...
சிறுகீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர உடற்பலம் உண்டாகும் (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


உடல் பருக்க...
கல்யாணப் பூசணிக்காயை வேக வைத்து அரைத்துப் பால்,தேன்,நெய் கலந்து லேகியமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை உண்டு வர உடல் பருக்கும்; உடற்சூடு நீங்கும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


உடல் இளைக்க...
சந்தனத்தைச் சீவி குடிநீர் செய்து குடித்து வர பருத்த உடல் இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


பசியின்மை, செரியாமை ஆகியன தீர...
தோல் நீக்கிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமான தேனில் ஊறவைத்துத் தினம் இரண்டு துண்டுகள் மட்டும் உணவிற்கு முன் உண்டுவரப் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


வயிற்றுப்புழுக்கள் நீங்க...
சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்துச் சுண்டை வற்றலாக்கிச் சூரணித்து 1 முதல் 2 கிராம் வெந்நீருடன் தினமும் இருவேளை உட்கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர...
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து விதிப்படிக் குடிநீர் செய்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, பால் ஆகியன சேர்த்துத் தீப்பிடிக்காமல் பாகுபதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


புண்கள் குணமாக...
இலுப்பைப் பிண்ணாக்கை இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு இளவெந்நீரில் குளித்து, இச்சூரணத்தைத் தேய்த்துக் கழுவ, அழுகிய, நாட்பட்ட சீழ்கோர்த்த புண்கள் குணமாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


உடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன நீங்க...
குப்பைமேனி இலைச் சாற்றுடன் மஞ்சள் சேர்த்து உடலில் பூசி வர உடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


இளநரை மாற...
மருதோன்றி(மருதாணி) இலையை நீர் விட்டு அரைத்துக் கற்கமாக்கித் தேங்காய் எண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து, ஈரம் வற்றிய பின் வடித்துத் தலையில் தடவி வர இளநரை மாறும், கண் குளிர்ச்சியடையும், நல்ல தூக்கம் உண்டாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


முடி வளர...
சடாமஞ்சிலைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர கூந்தல் வளரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


சொத்தைப்பல் குணமாக...
கண்டங்கத்தரிப்பழ விதையைக் காய வைத்து அனலில் இட்டு வரும் புகையை வாயில் படும்படி செய்ய சொத்தைப்பல் குணமாகும்; பல்வலிகுறையும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


பொடுகு குணமாக, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த...
பொடுதலை இலைகளை நல்லெண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து ஈரம் வற்றியபின் வடித்துத் தினமும் தலையில் தேய்த்து வர பொடுகு குணமாகும்; முடி உதிரல் கட்டுப்படும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


பற்களின் கறை நீங்க...
நாயுருவி வேரைச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பல் துலக்கி வரப் பல் துப்புரவாகும்; பற்களின் கறை நீங்கும்; 1/2 முதல் 1 கிராம் வரை உண்டு வர உடல் வலுவாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


மூக்கடைப்பு சரியாக...
ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து 2 கிராம் எடுத்து அத்துடன் 1 கிராம் பச்சைக் கற்பூரம் சேர்த்து வெள்ளைத் துணியில் கட்டி நுகர, மூக்கடைப்பு, மூக்குநீர் பாய்தல், பீனிசம் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து


முகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக...
அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


விடியற்காலையில் நீர் அருந்துதல்....
துளசி, வில்வம், அருகம்புல் ஆகிய ஏதாவது ஒன்றினை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடிவைத்து அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும். விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் நீர் அருந்துதல் வேண்டும். இதனால் உடல் வெப்பம் குறையும். சிறுநீர்பை, மலக்குடல், அடிவயிறு ஆகியவற்றின் வெப்பம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். இரவில் ஒரு லிட்டர் நீரைக் காய்ச்சி அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறையும்.


இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக...
தாளிசபத்திரி சூரணத்தைத் தேன் கலந்து தினம் 1/2 முதல் 1 கிராம் சாப்பிட்டு வர இருமல், இரைப்பு ஆகியன குணமாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)


உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு...
உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் போன்ற உடல் உபாதை உள்ளவர்கள் உணவில் புளிப்பைச் சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் புளிப்பு உடலில் அமிலத்தை அதிகரித்து இன்னும் இந்த நோய்களின் தன்மையை அதிகரிக்கும். 10-15 நாட்களுக்கு புளிப்பான உணவை தவிர்க்க வேண்டும். தக்காளி, எலுமிச்சை, தயிர், மோர், புளி, ஆரஞ்சு, சாத்துகுடி, மாம்பழம், திராட்சை ஆகியவை புளிப்புத் தன்மை உள்ளவை. நோயாளிகள் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம் வகைகளையும் தவிர்க்க வேண்டும். காயிலே புளிப்புதன்மையும், பழுத்த பின் இனிக்கும் பழவகைகளையும் தவிர்க்க வேண்டும். பப்பாளி, சீதாபழம், கொய்யா, வாழைப்பழம், சப்போட்டா, அத்திபழம், கரும்பு, எலுமிச்சை சேர்க்காத கரும்புச்சாறு, இளநீர் மற்றும் தர்பூசணி சேர்த்துக் கொள்ளலாம்... மைதா சேர்க்கப்பட்ட எந்த உணவையும் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. மைதா உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் பிரட், பிஸ்கட், நூடுல்ஸ், சமோசா போன்ற மைதாவால் ஆன பொருட்களை எப்போதுமே அறவே தவிர்க்க வேண்டும். மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போடுவதை தவிர்க்க வேண்டும்.

Source:கிராமத்துபாட்டி வைத்தியம் and (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)